யாழ் தீவுகள் உருவான வரலாறு – பகுதி 02
கரம் தொட்டால் பொன்னாகும் வளம் கொண்ட தாய் மண்ணை கொண்ட கிராமம் தான் கரம்பொன், இந்த சொல் பேச்சுவழக்கில் கரம்பன் என்று சொல்லபடுவதும் உண்டு .இந்த ஊரின் மண் வளத்தால் இந்த நிலம் மரங்கள் நிறைந்த சோலையாக இருந்தகாக குறிப்புக்கள் தகவல் சொல்கின்றது. பல அறிஞர்களையும் வள்ளல்களையும் இறை பணியாளர்களையும் பெற்றெடுத்த இந்த கிராமம். வேலணைத்தீவின் முக்கிய ஒரு கிராமம் ஆகும். வளமான இந்த தாய் மண்ணில் வேளாண்மை செய்து பிடி அரிசி கொடுத்து பல வறியவர்கள் வாழ்வை மலர செய்தவர்கள் இந்த கிராமத்து மக்கள் என்ற ஒரு கடந்தகால உண்மை செய்தி இந்த பகுதியில் வாழும் மக்களின் பெரும் தன்மையை எடுத்துக்காட்டுகின்றது. ஈழத்தில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்னர் இந்த இடம் குட்டி வத்திகான் என்றும் அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இத்தீவின் தெற்கு எல்லையில் சுருவிலும் கிழக்கில் நாரந்தனையும் ,வடக்கே காவலூர் கடலும் உள்ளது .இந்த தீவில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தை முதன்மை தொழிலாகவும், மீன் பிடி தொழிலையும் ஏனைய சிறு தொழில்களையும் செய்து வந்தனர் .இவர்கள் மிகவும் விடா முயற்சி உடைய மக்கள் என்று பெயர் எடுத்தவர்கள் .தங்கள் கிராமத்தை தாங்களே தன்னிறைவு காண வைக்கும் அளவுக்கு வரலாற்றில் வாழ்ந்தவர்கள்.
இவர்கள் வழிபட்டு முறையில் அம்மன், முருகன், சிவன், பிள்ளையார், வைரவர் போன்ற தெய்வங்களையும், கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் புனித செபஸ்தியார், வேளாங்கண்ணி மாதா, புனித அன்னம்மாள் ஆகிய தெய்வங்களையும் இந்த கிராமத்தில் பல கோவில்கள் அமைத்து வழிபட்டார்கள்.
இந்து கிறிஸ்தவ மக்கள் இணைந்து வாழும் இந்த கிராமத்தில் வாழ்ந்த மக்கள் கற்றறிதலிலும் சமூக சேவைகள் புரிதலிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட மக்கள் .அதற்கு சான்றாக இந்த கிராமத்தில் தோன்றிய பல கல்விமான்களை சமூக சேவையாளர்களையும் குறிப்பிடலாம் .இவர்களில் முதன்மையாக இங்குள்ள சண்முக நாத வித்தியா சாலையை நிறுவிய மாதேவசு சுவாமிகள், இன்றைய தமிழ் உலகம் போற்றும் பல மொழிகளில் பாண்டித்தியம் பெற்ற தனிநாயக அடிகள், அக்குணாஸ் பல்கலை கழகத்தை நிறுவிய வண சகோ பீற்றர்பிள்ளை, யாழ்ப்பான வைபவ மாலை எழுதிய குல சபாநாதன் மற்றும் ஆயர்களான ,தாமஸ் சௌந்தரநாயகம் அதி வணக்கத்துக்குரிய தியோகுபிள்ளை அதி வணக்கத்துக்குரிய எமிலியானுஸ்பிள்ளை போன்றவர்களை குறிப்பிடலாம். மேலும் பல மக்கள் நலன் சார்ந்த அரசியல் வாதிகளும், பல தமிழ் பெருந்தகைகளும் இந்த மண்ணில் பிறந்து இருக்கின்றார்கள்.
இங்கு உள்ள மாணவர்களின் கல்வியில் சண்முக நாத வித்தியாசாலை, சிறிய புஸ்பமகளிர் மகா வித்தியாலயம், மெலிஞ்சிமுனை றோ.க. வித்தியாலயம் ஆகியவற்றின் பங்கு அளப்பரியது.
இந்த கிராமத்தில் கரம்பொன் கிழக்கு,தென்கிழக்கு,மேற்கு என கிராம சேவகர் பிரிவுகள் இருக்கிறது. ஏனைய சாதாரண வசதிகளையும் கொண்டு இந்த கிராமம் விளங்கின்றது.
ஈழ போர் தந்த வடுக்களால் புலம்பெயர்ந்தவர்களில் இவர்களும் விதி விலக்கில்லை இவர்கள் புலம் பெயர்ந்து பல்வேறு தேசம் தாண்டி நின்றாலும் நேசம் கொண்ட தமிழ் மக்களின் வாழ்வுக்கும் தமிழ் மொழிக்கும் பெரும் உதவியாக இருக்கின்றார்கள். சர்வதேசத்தில் தமிழரின் வரலாற்றை பெருமைகளை சொல்வதில் முன் நிற்கின்றார்கள். தமது சொந்த தாய் கிராமத்தையும் மறவாமல் பல தொண்டு நிறுவனங்களை அமைத்தும் தனிபட்ட ரீதியிலும் பல சேவைகளை செய்கின்றார்கள்.
அடுத்த பகுதியில் வேலணை தீவின் ஏனைய கிராமங்கள் பற்றியும் ஏனைய தீவுகள் பற்றிய சிறப்புக்களையும் வரலாற்றின் தடத்தில் நகர்ந்து பார்ப்போம்
நன்றியுடன் சிவமேனகை
Excellent effort.I am anxiously awaiting further research articles from you.i am at the moment involved in compiling a book titled ” A Recorded history of Kayts (Leyden ) Island” to be released by next March.
If you need a copy, please be in touch with me.I will mail you one as soon as it is printed.
Rajabalan B.Sc(Hons), Diploma in Accounting (Canada)
Thank you. keep us posted 🙂